நதியா பிளஸ் 4 - பாகம் 1

நதியாவின் கழுத்தை நெரித்ததில் அவள் பிணமாக சரிந்து கிடந்தாள். அதை பார்த்த பாஸ்கருக்கு கொடூர திருப்தி. ‘‘இந்த அழகு தானே என்னை வெறுத்தது? இந்த அழகு தானே இன்னொருத்தனை விரும்பியது? இப்போது என்னடி பண்ணுவே?’’ தனக்கு தானே பேசிக் கொண்டான் பாஸ்கர்.
‘‘உன்னை எல்லாம் அப்படி விட்டுடக்கூடாதுடி’’ ஆவேசம் கொண்டவனாய், ஓடிச்சென்று வீட்டின் பரணில் இருந்த ரம்பத்தை எடுத்து வந்தான்.
வந்த மாத்திரத்திலேயே கழுத்தை கரகரவென்று அறுத்துப்போட்டான்.
முண்டத்தின் தலைமுடியை கொத்தாய் பிடித்து தூக்கிய பாஸ்கர், ‘‘பாத்தியாடி…. உன் உடம்பு இங்க தனியா கிடக்கு…. பார்த்துக்கோ… உன்னை இன்னமும் கொடூரமா கொல்வேன்டி’’ என்று கூறியபடி, முண்டத்தை தூக்கிப்போட்டுவிட்டு, கைகள், கால்கள், உடலை தனித்தனியாக வெட்டினான்.
‘‘இப்ப தெரியுதா இந்த பாஸ்கர் எப்படிப்பட்டவன்னு?’’ கொக்கரித்தான்.
எல்லாவற்றையும் பெரிய பிளாஸ்டிக் கேரி பேக்குகளில் அடைத்து கோணிப்பையில் போட்டான்.
வீடு முழுக்க ரத்தம் பரவிக்கிடந்தது. அதை தண்ணீர் ஊற்றியும், பாத்ரூமியில் இருந்த ஆசிட்டையும் ஊற்றி 4 முறை சுத்தம் செய்தான். பின்பு, பைக்கில் கோணிப்பையை கட்டிக் கொண்டு, வீட்டை பூட்டிவிட்டு கிளம்பினான். ஒவ்வொரு குப்பை மேடுகளிலும், சாக்கடை கால்வாய்களிலும் நாய்கள் சுற்றிக் கொண்டிருந்த இடத்தை பார்த்து வீசி
பாகமாக எறிந்தான். கடைசியாக தலையை பெரிய குப்பைமேட்டில் வீசினான். அங்கு நாய்கள் எதுவும் தென்படவில்லை. அதனால் நாய்களை வரவழைக்கும் உபாயமாக ஏற்கனவே, பைக்கின் பெட்டியில் வைத்திருந்த பிரியாணியை எடுத்து தலையை வீசிய இடத்தில் எறிந்தான்.
பின்பு நிம்மதியாக வீட்டுக்கு திரும்பினான்.
வாங்கி வைத்திருந்த குவாட்டரையும், இன்னொரு பிரியாணி பொட்டலத்தையும் எடுத்து சாப்பிட்டான். நடுவில் விக்கல் எடுக்கவே, தண்ணீர் குடிப்பதற்காக எழுந்தான். அப்போது கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.
இந்த நேரத்தில் யாராய் இருக்கும்? யோசித்தவாறே கதவை திறந்தான் பாஸ்கர்.
கதவை திறந்த மறுவிநாடி, இரும்பு ராடினால் தலையில் கடுமையாக தாக்கப்பட்டு சரிந்தான்.
(தொடரும் 1)
(மேலும் என் படைப்புகளை படிக்க https://anubavampalasu.blogspot.com/)

No comments:

Post a Comment

Thanks