#நதியா பிளஸ்



நதியாவின் கழுத்தை நெரித்ததில் அவள் பிணமாக சரிந்து கிடந்தாள். அதை பார்த்த பாஸ்கருக்கு கொடூர திருப்தி. ‘‘இந்த அழகு தானே என்னை வெறுத்தது? இந்த அழகு தானே இன்னொருத்தனை விரும்பியது? இப்போது என்னடி பண்ணுவே?’’ தனக்கு தானே பேசிக் கொண்டான் பாஸ்கர்.

‘‘உன்னை எல்லாம் அப்படி விட்டுடக்கூடாதுடி’’ ஆவேசம் கொண்டவனாய், ஓடிச்சென்று வீட்டின் பரணில் இருந்த ரம்பத்தை எடுத்து வந்தான்.

வந்த மாத்திரத்திலேயே கழுத்தை கரகரவென்று அறுத்துப்போட்டான்.

முண்டத்தின் தலைமுடியை கொத்தாய் பிடித்து தூக்கிய பாஸ்கர், ‘‘பாத்தியாடி…. உன் உடம்பு இங்க தனியா கிடக்கு…. பார்த்துக்கோ… உன்னை இன்னமும் கொடூரமா கொல்வேன்டி’’ என்று கூறியபடி, முண்டத்தை தூக்கிப்போட்டுவிட்டு, கைகள், கால்கள், உடலை தனித்தனியாக வெட்டினான்.

‘‘இப்ப தெரியுதா இந்த பாஸ்கர் எப்படிப்பட்டவன்னு?’’ கொக்கரித்தான்.

எல்லாவற்றையும் பெரிய பிளாஸ்டிக் கேரி பேக்குகளில் அடைத்து கோணிப்பையில் போட்டான்.

வீடு முழுக்க ரத்தம் பரவிக்கிடந்தது. அதை தண்ணீர் ஊற்றியும், பாத்ரூமியில் இருந்த ஆசிட்டையும் ஊற்றி 4 முறை சுத்தம் செய்தான். பின்பு, பைக்கில் கோணிப்பையை கட்டிக் கொண்டு, வீட்டை பூட்டிவிட்டு கிளம்பினான். ஒவ்வொரு குப்பை மேடுகளிலும், சாக்கடை கால்வாய்களிலும் நாய்கள் சுற்றிக் கொண்டிருந்த இடத்தை பார்த்து வீசி

பாகமாக எறிந்தான். கடைசியாக தலையை பெரிய குப்பைமேட்டில் வீசினான். அங்கு நாய்கள் எதுவும் தென்படவில்லை. அதனால் நாய்களை வரவழைக்கும் உபாயமாக ஏற்கனவே, பைக்கின் பெட்டியில் வைத்திருந்த பிரியாணியை எடுத்து தலையை வீசிய இடத்தில் எறிந்தான்.

பின்பு நிம்மதியாக வீட்டுக்கு திரும்பினான்.

வாங்கி வைத்திருந்த குவாட்டரையும், இன்னொரு பிரியாணி பொட்டலத்தையும் எடுத்து சாப்பிட்டான். நடுவில் விக்கல் எடுக்கவே, தண்ணீர் குடிப்பதற்காக எழுந்தான். அப்போது கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.

இந்த நேரத்தில் யாராய் இருக்கும்? யோசித்தவாறே கதவை திறந்தான் பாஸ்கர்.

கதவை திறந்த மறுவிநாடி, இரும்பு ராடினால் தலையில் கடுமையாக தாக்கப்பட்டு சரிந்தான்.

(தொடரும் 1)

(மேலும் என் படைப்புகளை படிக்க https://anubavampalasu.blogspot.com/)
================
நதியா பிளஸ் 4

அடித்தவன் யாரென்று பார்ப்பதற்குள் பாஸ்கர் ரத்தவெள்ளத்தில் சரிந்தான்.

கையில் இரும்புத்தடியை வைத்துக் கொண்டிருந்த சந்திரன், மூச்சு வருகிறதா என்று பாஸ்கரின் மூக்கில் விரல்வைத்து பார்த்தான். அவன் மெதுவாக மூச்சு விட்டுக்கொண்டிருப்பதுதெரிந்தது. ஆத்திரம் அடைந்த சந்திரன் மேலும்,மேலும், பாஸ்கரின் தலையில் அடித்தான்.

‘‘மவனே சாவுடா… என் டார்லிங் நதியா, காலையிலேயே சொன்னாடா… என் புருஷன் சாயங்காலம் வர்றேன்னு சொல்லியிருக்கான்… அப்பவே அவனைபோட்டுத் தள்ளிடனும்னு…சொன்ன மாதிரியே நீ வந்து சிக்கிட்ட… மவனே கரெக்ட்டா நான் வர்றப்போதான் நீ உள்ளே நுழைஞ்சுட்டு இருந்தே… சாவுடா… ’’ என்று கூறி மேலும்,மேலும் பாஸ்கரின் தலையில் அடித்தான்.

தனக்கு முன்னலேயே தன்னைக்கொல்ல மனைவி நதியா திட்டமிட்டதை, அவனது கள்ளக்காதலன் சந்திரன் கூற, கூற பாஸ்கரின் மூளை விறுவிறுவென்று இருந்தது. ஆனால், காலன் அவனுக்கு அளித்த அவகாசம் முடிந்ததால் எதுவும் செய்ய முடியாமலேயேபோய்சேர்ந்தான்.

மீண்டும் பாஸ்கரின் மூக்கில் விரல் வைத்து பார்த்தான் சந்திரன். அவன் பரலோகம்போய்விட்டது உறுதியான பின்னர்தான் அடங்கினான்.

‘‘எங்க போய்ட்டா நதியா… ஒருவேளை இவன பார்க்க பிடிக்காம அம்மா வீட்டுக்கு புறப்பட்டு போய்ட்டாளோ…சொல்லாமபோக மாட்டாளே …போனும் ரிங் போகுது ஆனா, எடுக்க மாட்டேங்கிறாளே…பேக்கில வச்சிருப்பாளோ?.... சரி ஏற்கனவே பிளான்போட்ட மாதிரியே இவனை காணமா ஆக்கிடவேண்டியது தான்’’ என்று நினைத்தவாறே அடுத்தக் கட்ட வேலையில் இறங்கினான்.

ஏற்கனவே நதியாவிடம் சொல்லி, அனுப்பி வைத்திருந்த எச்எப் ஆசிட் டிரம் எங்கிருக்கிறது என்று பார்த்தான். சரியாக அது முன்னரே சொன்னதுப்போல பாத்ரூமில் வைக்கப்பட்டிருந்தது.

பாஸ்கரின் உடலைகொண்டு வந்திருந்த கூரான கத்தியால் வெட்டி கூறுபோட்டான். அதை ஆசிட்டால் போடப்போட அப்படியொரு பொருள் இருந்த தற்கான அடையாளமே தெரியாமல் எச்எப் ஆசிட்டில் கரைந்துபோனது.

எல்லா வேலையும் முடிந்தவுடன், ஆசிட் டிரம்மின் கீழே இருந்த குழாயை மெதுவாக திறந்துவிட்டான். அது மெதுவாக வெளியேற ஆரம்பித்தபோது, டிரைனேஜ் குழாயில் இருந்து புகை கிளம்பியது. அதன் வீரியத்தை குறைக்க குழாயின் வேகத்தை குறைத்தான். எல்லாம் வெளியேற கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரத்துக்குமேல் ஆனது.

தரையில் படித்திருந்த ரத்தம் முழுவதையும் துடைத்து கழுவி விட்டான்.

‘‘இனி நதியாவுக்கும், எனக்கும் இடையில் யாரும் இல்லை. என் டார்லிங்கை மணந்துக் கொள்ள தடையாக இருந்த அவ புருஷனும் போய் சேர்ந்துட்டான்’’ நினைத்துக் கொண்டே டிவியை ஆன் செய்தான்.

சன் டிவியில் வள்ளி தொடர் ஆரம்பித்திருந்தது. காமெடி டயத்துக்கு சேனலை மாற்றினான்.

வெளியே கதவை தட்டும் சத்தம்கேட்டது. அட்ற சக்க… நதியா வந்துட்டா… இன்னைக்கு என் டார்லிங்கோட சிவராத்திரிதான் என்று சந்தோஷத்தில் துள்ளிக்குதித்து கதவை திறக்கபோனான் சந்திரன்.

(தொடரும் 2)

(மேலும் என் படைப்புகளை படிக்க https://anubavampalasu.blogspot.com/)
==============
நதியாதான் வந்திருப்பாள் என்று நினைத்து கதவை திறந்த சந்திரனுக்கு, என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள் அவன் முகத்தில் மயக்க மருந்து ஸ்பிரே அடிக்கப்பட்டது.

அவனது கைகளை தனது தோளில் போட்டுக் கொண்டபடி, படுக்கையில் படுக்க வைத்தான் ஓம்பிரகாஷ்.

‘‘ஏண்டா… ஊரான் விட்டு பொண்டாட்டிய நாங்க கஷ்டப்பட்டு வளைச்சு பட்டா போட்ட வச்சா… நீங்க ஈசியா வந்து கொத்திட்டு போவீங்களோ?... அதுதாண்டா உன்னை போடுறதுக்கு சமயம் பார்த்துட்டு இருந்தேன். மவனே நீயா வந்து சரியா மாட்டினே… சம்மதிச்சா நதியாவை விட்டுறது… இல்லேன்னா அவளையும் போட்டுத் தள்ளுறதுன்ற பிளான்ல தாண்டா இருந்தேன். சரியா நீ இந்த ஏரியாவில வர்றத பார்த்துட்டு, என் ஆளு தகவல் சொன்னான்’’

‘‘உன்னை எல்லாம் சும்மா விடக்கூடாதுடா… நினைச்சாலே வயிறு எரியுதுடா… நான் கஷ்டப்பட்டு பிடிச்ச நதியாவோட மனசை மாத்த்திட்டியேடா… எங்கே அவ?’’ என்று சந்திரனை படுக்கையில் போட்டுவிட்டு, நதியாவை தேடினான். ஆனால், அவள் எங்கும் இல்லாததால் நிம்மதி அடைந்தான்.

‘‘இவன் மட்டும்தான் இருந்துள்ளான். அப்படின்னா… அவ ஊருல இல்லை. அம்மா வீட்டுக்கு போயிருக்கணும். இவன் குவாட்டரை கொண்டு வந்திருக்கிறப்போவே தெரியுது…. ஏன்னா நதியாவுக்குத்தான் தண்ணியடிச்சா பிடிக்காதே. சோ… நம்ம வேலை இன்னும் ஈசியா முடியப்போவுது’’ என்று நினைத்துக் கொண்டான்.

சட்டை பையில் இருந்த பாத் சால்ட் பாக்கெட்டை எடுத்து, சில்வர் பாயிலில் வைத்து லைட்டரால் உருக்கினான். அதை இன்ஜெக்‌ஷனில் எடுத்து சந்திரனின் உடலில் செலுத்தினான். நடப்பது எதுவும் தெரியாமல், போதை மருந்து விளைவினால் ராஜமயக்கத்துக்கு சென்றான் சந்திரன்.

அவனை அப்படியே கைத்தாங்கலாக கூட்டிக் கொண்டு சென்று தன்னுடைய காரில் ஏற்றிக் கொண்டான். கதவை பூட்டிவிட்டு, கிளம்பினான்.

ஊருக்கு வெளிப்புறத்தில் இருந்த கிணற்றில் அவனை தள்ளிவிடுவதுதான், ஓம்பிரகாஷின் திட்டம். போதையில் கிணற்றில் விழுந்தால் மூச்சுத் திணறி சாக வேண்டியதுதான். சாவது கூட தெரியாமல், போய் சேர வேண்டியதுதான்.

கார் மெதுவாக ஓடிக் கொண்டிருந்தது.

தூரத்தில் ஒரு செங்கல் சூளை எரிந்து கொண்டிருப்பது, இரவு நேரத்தில் தெளிவாகத் தெரிந்தது. சட்டென மின்னல் வேகத்தில் ஓம்பிரகாஷின் மனதில் ஒரு யோசனை உதித்தது.

அப்படியே செங்கல் சூளைக்கு அருகே வண்டியை நிறுத்திவிட்டு, இறங்கிச் சென்று பார்த்தான். அங்கு ஒரே ஒரு காவலாளி மட்டும் இருந்தான். அவனும் தண்ணியடித்துவிட்டு, குறட்டைவிட்டு தூங்கிக் கொண்டிருந்தான். பக்கத்தில் அவன் சாப்பிட்டுப்போட்ட மட்டரகமான மது பாட்டில் ஒன்று கிடந்தது. சூளைக்கு அருகில் யாருமே இல்லை. அக்கம், பக்கத்திலும் ஆள் நடமாட்டம் இருப்பதாக தெரியவில்லை.

உடனடியாக காரில் இருந்த சந்திரனை மீ்ண்டும் இழுத்துக் கொண்டு வந்தான். எழுந்தாலும் எழுந்துவிடுவான் என்று பயந்தததால் இன்னொரு டோஸ் போதை மருந்தை அவனுக்கு ஏற்றினான். பின்னர் சூளையின் முன்னே இருந்த விறகுகளை மட்டும் வெளியே எடுத்துவிட்டு, அவனை அப்படியே உயிருடன் உள்ளே தள்ளினான். பின்னர் விறகுகளையும் உள்ளே தள்ளினான்.

அங்கேயே ஒரு மணிநேரம் காரில் ஏசி போட்டு இருந்துவிட்டு, நிம்மதியாக நதியாவின் வீட்டுக்கு கிளம்பினான்.

அக்கம், பக்கத்தில் சப்தம் எல்லாம் அடங்கி நிசப்தமாக இருந்தது.

வீட்டுக்குள் நுழைந்து, டிவியை போட்டு மிட்நைட் மசாலாவை பார்க்க ஆரம்பித்தபோது, செல்போன் ஒலித்தது.

புது நம்பராக இருந்ததால், யாரென்று தெரியாமல் போனை ஆன் செய்தான்.

‘‘என்ன மாப்பிள்ளை யாரை போட்டுத் தள்ளிட்டே போலிருக்கே?’’ என்றது மறுமுனையில் இருந்தவரின் குரல்.

என்னதான் ஏரியா ரவுடியாக இருந்தாலும், அதை கேட்ட மாத்திரத்திலேயே உள்ளூர ஒரு பயம் ஒட்டிக் கொண்டது.

‘‘டேய் நீ யாருடா… என்னடா உளர்றே?’’ ஓம்பிரகாஷ் குரலில் மட்டும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பேசினான்.

‘‘மச்சி நீ பண்ணின எல்லாத்தையும் நான் பாத்திட்டேன். அதை செல்போன்ல படமும் பிடிச்சு வச்சிருக்கேன்… எனக்கு வேண்டியதை நீ் செஞ்சிட்டா உன்னை ஏன் நான் சீண்டப் போறேன்?’’

‘‘உனக்கு என்ன வேணும்?’’

‘‘அதை போன்லேயே சொல்ல முடியாது சேரி ரயில்வே ஸ்டேஷன் அவுட் போஸ்ட்டுக்கு வா’’ கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்தது மறுமுனை.

‘‘எவனா இருக்கும்…. போறதா வேண்டாமா…’’ ஆயிரம் யோசனைகள் வந்து சென்றன ஓம்பிரகாஷூக்கு.

தெளிவா வீடியோ எல்லாம் பிடிச்சு வச்சிருக்கான். அப்புறம் நம்ம ஏரியாவிலேயே நம்மை போட எந்த ரவுடியும் முடிவு செய்ய மாட்டான்.

அதனால போகலாம் என்று முடிவு செய்து கிளம்பினான்.

சேரி ஸ்டேஷன் அவுட் போஸ்ட்க்கு சென்று காத்திருந்தான். பார்வை தூரத்தில் இருந்த தண்டவாளத்தில் ரயில்கள் இந்தப்பக்கமும், அந்தப்பக்கமுமாக விரைந்துக் கொண்டிருந்தன.

இரவு நேரம் என்பதால், ஆள் நடமாட்டம் எதுவும் இல்லை. பையில் இருந்த கத்தியை தொட்டு பார்த்துக் கொள்வதற்காக கையை பாக்கெட்டில் துழாவ முற்பட்டபோது, அவன் தலையில் பலமான அடிவிழுந்து மயங்கி சரிந்தான்.

(தொடரும் 3)

(மேலும் என்னுடைய படிப்புகளை படிக்க: https://anubavampalasu.blogspot.com)
-------------------------
ஓம்பிரகாஷ் மயங்கிய உடன், முன்னே வந்தான் மோகன்.

‘‘எத்தனை தடவை சொன்னேன். அவளைப் பார்க்க போகாதே… அவளைப் பார்க்க போகாதேன்னு. உனக்குத்தான் நான் இருக்கேனடா… இனி உன்னை விடமாட்டேன். எனக்கு கிடைக்காத நீ வேற எவளுக்கும் கிடைக்க விடமாட்டேன்… அதனாலத்தான் கொஞ்ச நாளா உன்னை பாலோ பண்ணிட்டு இருந்தேன். நான் சொல்ல… சொல்ல கேட்காமா, நீ மறுபடியும் அவ வீட்டுக்கு போனப்போதான் முடிவு பண்னேன். உன்னை முடிச்சிடுறதுன்னு’’ பொருமினான் மோகன்.

அவனை அப்படியே இழுத்து ரயில் டிராக்கில் போடுவதற்காக இழுத்தான். ஆனால், திடகாத்திரமான ஓம்பிரகாஷின் உடலை மோகனால் இழுக்க முடியவில்லை.

காரில் சாய்ந்தபடி ஓம்பிரகாஷை நிற்க வைத்தான். பின்பு அவனுடைய கைகளை தன் தோள்களின் மீது போட்டுக் கொண்டு அப்படியே டிராக்குக்கு இழுத்து சென்றான்.

டிராக்குக்கு அருகில் அவனை போட்டான். எழுந்தவுடன் அவனது செயலை சொல்லிவிட்டு டிராக்கில் தள்ளிவிட வேண்டும் என்று கருவினான் மோகன்.

‘‘இவன் எழுந்தால், ஒரே போடில் நம்மை வீழ்த்திவிடுவானே…. என்ன செய்வது?’’ யோசித்தான்.

உடனடியாக அவனது ஆடைகள் முழுவதையும் கழற்றி, கண்ணுக்கு தெரியாத இடத்தில் தூக்கிப்போட்டான்.

‘‘இப்ப எப்படி ஓடுவே?’’ தன்னைத்தானே கேட்டுக் கொண்டான்.

சுமார் 3 மணி நேரத்துக்குப் பிறகு ஓம்பிரகாஷின் உடலில் அசைவுகள் தெரிந்தது.

‘‘எழுந்துட்டான் என் ஹீரோ… இந்த அழகிலதானேடா உன்கிட்ட மயங்கினேன். இப்போ இன்னொருத்திக்கிட்ட போறதுன்னா எப்படி?’’

கண்ணை கசக்கியபடி விழித்த ஓம்பிரகாஷூக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. பின்னர்தான் தன்னை யாரோ அடித்துப்போட்டது ஞாபகத்துக்கு வந்தது. தனக்கு முன்னே இருந்த மோகனைப் பார்த்ததும், அவனுக்கு கோபம் கொப்பளித்துக் கொண்டு வந்தது.

‘‘ஏய்… நீ தான் என்னை அடித்துப்போட்டியா?’’கோபம் பொங்க கேட்டான்.

‘‘ஆமாம்… மச்சான். நானேதான் உன்னை அடிச்சுப் போட்டேன். நீ பண்ண துரோகத்துக்கு உனக்கு தண்டனை குடுக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டேன். அதனாலத்தான் உன்னை இங்கே வரவைச்சேன்’’

‘‘டேய்… அப்பாவின்னு உன்னை நினைச்சேனடா… நீயா இந்த காரியத்தை எல்லாம் பண்னே?’’ என்று கூறிவிட்டு எழ முயற்சித்தபோதுதான், உடலில் ஆடை எதுவும் இல்லாமல் இருப்பது தெரிந்தது.

‘‘டேய்… என்னப் பண்ணப்போறே… எதுவா இருந்தாலும் பேசித்தீர்த்துக்கலாம். என் டிரஸ்சை குடு’’

‘‘இல்ல மச்சான்… இனி நான் எவ்வளவு தடுத்தாலும் நீ என்னை சீண்டப் போறதில்ல… அந்த பொம்பளைக்கிட்ட போறதுன்னு நீ முடிவு பண்ணப்பிறகு எனக்கு எதுக்கு நீ…’’

டிராக்கில் தூரத்தில் ரயில் வரும் வெளிச்சம் தெரிந்தது.

‘‘என் பொறப்பு தப்பானது. ஆனா உன்னை என் புருஷனா நினைச்சு வாழலாம்னு முடிவு பண்ணியிருந்தேன். ஆனா… நீ என்னை விட்டு விலகிட்ட… அதனால….’’ என்று கூறிவிட்டு, ஓம்பிரகாஷை டிராக்கில் தள்ளிவிட்டான்.

அந்த நொடியில்தான் ஓம்பிரகாஷ் முடிவு செய்தான்.

தன்னை தள்ளிவிட வந்த மோகனின் இரு கைகளை பிடித்துக் கொண்டு தப்பிவிடலாம் என்று நினைத்து பிடித்தான். ஆனால், வெறிக் கொண்ட தள்ளிய மோகனின் விசையை தாங்க முடியாமலும், அவனுடனேயே டிராக்கில் விழுந்தான்.

இருவரையும் 6 துண்டுகளாக பிரித்துவிட்டு போய்க்கொண்டே இருந்தது கங்கை எக்ஸ்பிரஸ்.

விடிந்துவிடியாத அந்த பொழுதில் தூரத்தில் யாரோ வைத்திருந்த ரேடியோவில், ‘‘நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்…’’ பாட்டு கேட்டுக் கொண்டிருந்தது.
(முற்றும்)
(மேலும், என்னுடைய படைப்புகளை படிக்க: https://anubavampalasu.blogspot.com)

No comments:

Post a Comment

Thanks