நதியா பிளஸ் 4
அடித்தவன் யாரென்று பார்ப்பதற்குள்
பாஸ்கர் ரத்தவெள்ளத்தில் சரிந்தான்.
கையில் இரும்புத்தடியை வைத்துக் கொண்டிருந்த சந்திரன், மூச்சு வருகிறதா
என்று பாஸ்கரின் மூக்கில் விரல்வைத்து பார்த்தான். அவன் மெதுவாக மூச்சு விட்டுக்கொண்டிருப்பதுதெரிந்தது.
ஆத்திரம் அடைந்த சந்திரன் மேலும்,மேலும், பாஸ்கரின் தலையில் அடித்தான்.
‘‘மவனே சாவுடா… என் டார்லிங்
நதியா, காலையிலேயே சொன்னாடா… என் புருஷன் சாயங்காலம் வர்றேன்னு சொல்லியிருக்கான்… அப்பவே
அவனைபோட்டுத் தள்ளிடனும்னு…சொன்ன மாதிரியே நீ வந்து சிக்கிட்ட… மவனே கரெக்ட்டா நான்
வர்றப்போதான் நீ உள்ளே நுழைஞ்சுட்டு இருந்தே… சாவுடா… ’’ என்று கூறி மேலும்,மேலும்
பாஸ்கரின் தலையில் அடித்தான்.
தனக்கு முன்னலேயே தன்னைக்கொல்ல
மனைவி நதியா திட்டமிட்டதை, அவனது கள்ளக்காதலன் சந்திரன் கூற, கூற பாஸ்கரின் மூளை விறுவிறுவென்று
இருந்தது. ஆனால், காலன் அவனுக்கு அளித்த அவகாசம் முடிந்ததால் எதுவும் செய்ய முடியாமலேயேபோய்சேர்ந்தான்.
மீண்டும் பாஸ்கரின் மூக்கில்
விரல் வைத்து பார்த்தான் சந்திரன். அவன் பரலோகம்போய்விட்டது உறுதியான பின்னர்தான் அடங்கினான்.
‘‘எங்க போய்ட்டா நதியா… ஒருவேளை இவன பார்க்க பிடிக்காம அம்மா வீட்டுக்கு
புறப்பட்டு போய்ட்டாளோ…சொல்லாமபோக மாட்டாளே …போனும் ரிங் போகுது ஆனா, எடுக்க மாட்டேங்கிறாளே…பேக்கில வச்சிருப்பாளோ?....
சரி ஏற்கனவே பிளான்போட்ட மாதிரியே இவனை காணமா ஆக்கிடவேண்டியது தான்’’ என்று நினைத்தவாறே
அடுத்தக் கட்ட வேலையில் இறங்கினான்.
ஏற்கனவே நதியாவிடம் சொல்லி,
அனுப்பி வைத்திருந்த எச்எப் ஆசிட் டிரம் எங்கிருக்கிறது என்று பார்த்தான். சரியாக அது
முன்னரே சொன்னதுப்போல பாத்ரூமில் வைக்கப்பட்டிருந்தது.
பாஸ்கரின் உடலைகொண்டு வந்திருந்த
கூரான கத்தியால் வெட்டி கூறுபோட்டான். அதை ஆசிட்டால் போடப்போட அப்படியொரு பொருள் இருந்த
தற்கான அடையாளமே தெரியாமல் எச்எப் ஆசிட்டில் கரைந்துபோனது.
எல்லா வேலையும் முடிந்தவுடன்,
ஆசிட் டிரம்மின் கீழே இருந்த குழாயை மெதுவாக
திறந்துவிட்டான். அது மெதுவாக வெளியேற ஆரம்பித்தபோது,
டிரைனேஜ் குழாயில் இருந்து புகை கிளம்பியது. அதன் வீரியத்தை குறைக்க குழாயின் வேகத்தை
குறைத்தான். எல்லாம் வெளியேற கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரத்துக்குமேல் ஆனது.
தரையில் படித்திருந்த ரத்தம்
முழுவதையும் துடைத்து கழுவி விட்டான்.
‘‘இனி நதியாவுக்கும், எனக்கும்
இடையில் யாரும் இல்லை. என் டார்லிங்கை மணந்துக் கொள்ள தடையாக இருந்த அவ புருஷனும் போய்
சேர்ந்துட்டான்’’ நினைத்துக் கொண்டே டிவியை
ஆன் செய்தான்.
சன் டிவியில் வள்ளி தொடர்
ஆரம்பித்திருந்தது. காமெடி டயத்துக்கு சேனலை மாற்றினான்.
வெளியே கதவை தட்டும் சத்தம்கேட்டது.
அட்ற சக்க… நதியா வந்துட்டா… இன்னைக்கு என் டார்லிங்கோட சிவராத்திரிதான்
என்று சந்தோஷத்தில் துள்ளிக்குதித்து கதவை திறக்கபோனான் சந்திரன்.
(தொடரும் 2)
No comments:
Post a Comment
Thanks